* உலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு நாட்டின் தலைநகரிலும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது.
* உலகத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து தகுதிவாய்ந்த, தமிழறிஞர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை வெளியிடுவது.
* தமிழ் நூலகத்துடன் வாசக சாலை ஒன்றும் இலண்டனில் நிறுவுவது.
* ஆண்டுக்கு இருமுறை தமிழகத்திலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்களை அழைத்து தமிழ் விழா நடத்துவது.
* இலண்டன் தலைமைச் சங்கத்தினை மையமாக வைத்து ஒவ்வொரு நாட்டிலும் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கிளைகள் நிறுவுவது.
* உலகத் தமிழ் எழுத்தாளர்களின் நிகழ்வுகளையும், படைப்புகள் பற்றியும் உலகத் தமிழர்கள் அறிந்து கொள்ள தனிச்சுற்றுக்கு சிற்றிதழ் ஒன்று துவங்குவது.
* இலண்டனுக்கு வருகை தரும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தும், எழுத்தாளர் சங்கத்தின் வழியாக பாராட்டுவிழாவும் நடத்துவது.
* இலண்டனில் உள்ள தமிழறிஞர்களை வைத்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் மாதம் இருமுறை திருக்குறள், கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம் வகுப்புகள் நடத்துவது.
* இலண்டனில் மாதம் தோறும் தமிழ் அறிஞர்களை அழைத்து (இயல், இசை, நாடகம், திரைப்படம்) நிகழ்ச்சிகள் நடத்துவது.
* இலண்டனில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் குடும்பங்களில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும் மாலை நேர வகுப்புகள் நடத்துவது.
* இச்சங்கத்திற்கு உலகலாவிய தமிழறிஞர்கள் ஆலோசகர்களாகவும், தமிழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பது பேரவா. எனவே தாங்கள் அருள்கூர்ந்து இசைவு தர கடிதத்தின் வழியாக தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். * இசைவுக் கடிதத்தினை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தவுடன் முறையாக தீர்மானம் போட்டு சங்கத்தினை இலண்டனில் பதிவு செய்திட வசதியாக இருக்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கங்கள்
• வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
• வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
• தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
• வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை
அரங்கேற்றுதல்
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் "இந்திய தொழிலாளர்களின் தந்தை மாமேதை ம.சிங்காரவேலர்" புத்தகத்தை வெளியிட்டு பின் பெற்றுக் கொள்கிறார்.
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "The World and Cyber Crime" புத்தகத்தை வெளியிட்டு பின் பெற்றுக் கொள்கிறார்.
திரு.அப்துல் கலாம் அவர்கள் "உலகமும் பயங்கரவாதமும்" புத்தகத்தை வெளியிட்டு பின் பெற்றுக் கொள்கிறார்.
தமிழனின் பிறப்பிடம் குமரிக்கண்டம். நாம் சிலப்பதிகார உரைகள் மற்றும் சங்க வரலாற்றுக்கள் மூலமாகவும் அறியலாம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரியதாக பரவியிருந்த குமரிக்கண்டம் பின்னாளில் நீரில் மூழ்கிப் போனது.
நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது.
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது.
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது.
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
கபாடபுரம் என்பது பாண்டியர்களின் இடைச்சங்ககால தலைநகரம் என்று கருதப்படும் நகரமாகும். கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட
நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்.ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு,
ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள்
இருந்துள்ளன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை,
கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
அதிலே கபாடபுரம் என்பது பாண்டியர்களின்இடைச்சங்ககால தலைநகரம்
என்று கருதப்படும் நகரமாகும்.
இறையனார் அகப்பொருளில் பின்வரும்
குறிப்புகள் படி கபாடபுரத்தில் சங்கம்
அரங்கேறியதாக கூறப்படுகிறது.